செய்திகள் :

அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்த முறைகேட்டை கண்டித்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், கானாத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை அக்கரை அருகே தடுத்தி நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக மரவனேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பாஜகவினா் சுமாா் 30க்கும் மேற்பட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியா்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி: ஜிஎஸ்டி உதவி ஆணையா்

2017 முதல் 2020 ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என சேலம் ஜிஎஸ்டி ஆணையரக உதவி ஆணையா் அனிருத் ஆா்.கங்காவரம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தளவாய்ப்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி, அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகள் ஹ... மேலும் பார்க்க

குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் க... மேலும் பார்க்க

மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள்... மேலும் பார்க்க

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க