செய்திகள் :

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

post image

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில் கிராம் அளவில் எல்லாம் இல்லை கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரவு கூறுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தென்காசியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி சொன்ன தகவல் தவறானது என மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணிப்பு

அதாவது, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஒரு கிராம் செயற்கை போதைப் பொருளைக் கூட பறிமுதல் செய்யவில்லை, ஆனால், மத்திய புலனாய்வு அமைப்புகள் பல நூறு கிலோ எடையுள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

மாநிலத்தின் அமலாக்கத் துறை அமைப்பின் - சிஐடி பிரிவு, வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களில், தமிழக காவல்துறையால் மாநிலம் முழுவதும் சுமார் 65 கிலோ மெத்தாம்பெட்டமைன், 145 கிலோ கச்சா எபெட்ரைன், 9 கிலோ மெத்தகுலோன், 2.1 கிலோ எல்எஸ்டி மற்றும் 1.23 லட்சம் மாத்திரைகள் தமிழகம் முழுவதும் தமிழகக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், மாநில காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் மெத்தாம்பெட்டமைன் அளவு தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த அளவை விட அதிகமாக அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அமைப்பு பறிமுதல் செய்திருப்பது 160 கிலோ என்று தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மிகப்பெரிய அளவில் நடந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்களை தடுத்து பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவி பேசும்போது, ஒபியம், ஹெராயின், ஹாஷிஷ் போன்ற போதைப்பொருள்கள் பற்றியும் பேசினார். இந்த நிலையில், தமிழக காவல்துறையின் புள்ளிவிவரத்தில், 2021 முதல் 92.7 கிலோ ஹாஷிஷ், 43 கிலோ ஹெராயின், 0.489 கிராம் ஒபியம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில், 75 கிலோ எடையுள்ள 180 கோடி மதிப்புள்ள ஹாஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் போதைப் பொருள் கட்டதலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆளுநர் ரவி சொன்னது போல, தமிழகத்தில் ஒரு கிராம் செயற்கைப் போதைப் பொருள் கூட பறிமுதல் செய்யப்படாமல் இல்லை. கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெள... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க