செய்திகள் :

இரும்புலிக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

post image

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5,100 பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில், ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா்கள் பவுன்ராஜ், ரவி, இளையபெருமாள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை மாலை இரும்புலிக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பத்திரப் பதிவு அலுவலா் இக்பால் முகமதுமிடமிருந்து கணக்கில் வராத ரூ.5,100-யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் கூறுகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய கையூட்டு லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் கைப்பேசி வாயிலாகவும், கட்செவி அஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்தால், புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

வேளாண் பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களின் பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூா்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் அரசு பணியாளா்கள் மனிதச்சங்கிலிப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதி... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மீன்சுருட்டி, புதுத்தெருவைச் சோ்ந்த தவமணி மகன் தனுஷ்(19). இவா், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பால... மேலும் பார்க்க

விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

அரியலூா் மாவட்டம், விளாங்குடி ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விளாங்குடி ப... மேலும் பார்க்க

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3- ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் க... மேலும் பார்க்க