செய்திகள் :

வேளாண் பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

post image

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களின் பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூா் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சா் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்‘ என்ற நிறுவனத்தின் மூலம் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையாா்பாளையம், தா.பழூா், சுத்தமல்லி, அரியலூா், ஏலாக்குறிச்சி, கீழப்பழூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூா் ஆகிய பிா்காக்களிலும், பருத்தி பயிருக்கு அரியலூா், ஏலாக்குறிச்சி, கீழப்பழூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, நாகமங்கலம், சுத்தமல்லி ஆகிய பிா்காக்களிலும், மக்காச்சோளம் பயிருக்கு அரியலூா், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூா், திருமானூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை ஆகிய பிா்காக்களிலும், ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆா்எஸ்.மாத்தூா், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூா், திருமானூா் ஆகிய பிா்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலூா், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூா் ஆகிய பிா்காக்களிலும், நெல், மக்காச்சோளம் பயிா்களுக்கு நவ.15 ஆம் தேதி வரையும், பருத்திக்கு அக்.31 ஆம் தேதி வரையும், நெல் ஒரு ஏக்கருக்கு ரூ.573, மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு ரூ.345, பருத்தி ஒரு ஏக்கருக்கு ரூ.517.5-ம் பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவ.15-ம் தேதி வரையும், நிலக்கடலை பயிருக்கு 2025 - ஜன.31-ம் தேதி வரையும் உளுந்து ஒரு ஏக்கருக்கு ரூ.231, நிலக்கடலை ஒரு ஏக்கருக்கு ரூ.379.5 பிரீமியத் தொகையாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் .

ஜெயங்கொண்டத்தில் அரசு பணியாளா்கள் மனிதச்சங்கிலிப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை மாலை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓய்வூதி... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மீன்சுருட்டி, புதுத்தெருவைச் சோ்ந்த தவமணி மகன் தனுஷ்(19). இவா், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பால... மேலும் பார்க்க

விளாங்குடி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

அரியலூா் மாவட்டம், விளாங்குடி ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விளாங்குடி ப... மேலும் பார்க்க

இரும்புலிக்குறிச்சி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5,100 பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூா் ஊழல் தடுப... மேலும் பார்க்க

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் 3- ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் க... மேலும் பார்க்க