செய்திகள் :

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

post image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லக்னௌ அணியினர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். இந்த நிகழ்வில், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பந்த், ஆர்யன் ஜுயால், ஹிம்மத் சிங், அப்துல் சமத், சக வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் உள்பட பல முக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!

இதுபற்றி முதல்வர் யோகி கூறும்போது, “கடந்த எல்லா தொடர்களிலும் லக்னௌ அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் கோப்பையை வெல்ல பாடுபடுவார்கள். இந்த அணி ஒழுக்கம், அர்பணிப்புக்கு பெயர் பெற்றது. இவர்கள் கோப்பையை வென்று நம் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்” என்றார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பிளே-ஆப் சுற்றுவரை முன்னேறிய லக்னௌ அணி, எலிமினேட்டரில் தோற்று வெளியேறியது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 7 ஆம் இடம் பிடித்தது.

மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சுமார் ரூ.27 கோடிக்கு லக்னௌ அணியால் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோருக்குப் பிறகு எல்எஸ்ஜியின் நான்காவது கேப்டனாக இவர்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி தில்லிக்கு எதிரான போட்டியில் மோதவிருக்கிறது. இந்தப் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப... மேலும் பார்க்க