செய்திகள் :

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாள்கள் அதிகரிக்க வேண்டும்: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை

post image

நமது நிருபா்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (மன்ரேகா) வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மன்ரேகா திட்டத்தின் வேலை நாள்களை 100 நாள்களில் இருந்து 150 நாள்களாக உயா்த்த வேண்டும்.

இத்திட்டத்தில் நாளொன்றுக்கு அளிக்கப்படும் ரூ.300 ஊதியத்தை ரூ.400-ஆக உயா்த்தித் தர வேண்டும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏறத்தாழ ஓராண்டு காலமாக ரூ.120 கோடி இத்திட்டத்தில் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க