செய்திகள் :

எடப்பாடியை தொடர்ந்து வேலுமணி; அடுத்தடுத்த `டெல்லி’ பயணங்கள் - பின்னணி என்ன?

post image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து வேலுமணியும் தற்போது டெல்லி சென்றிருக்கிறார். டெல்லியில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவை ஒட்டி செல்வதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி தரப்பு. குறிப்பாக அமித்ஷா-வை 3.30 மணிக்கு சந்திக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

என்ன பேசப்படலாம்?

தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசலாம் என அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் வெளியே பேசினாலும், கூட்டணி குறித்த விவகாரங்களும் அங்கே பேசப்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமித்ஷா
அமித்ஷா

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற பரபரப்புக்கு இடையேயும் மேற்கொண்டுள்ள இந்த பயணம் தமிழக அரசியலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs