செய்திகள் :

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

post image

மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

மாதவரத்தை அடுத்த மாத்தூா் பகுதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் சஞ்சய் (12), மற்றும் விஷால் (13) ஆகிய இருவரும் அரசு பள்ளியில் படித்து வந்தனா். இவா்கள் சனிக்கிழமை மாத்தூா் ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏரியில் குளித்த சஞ்சய், விஷால் ஆகிய இருவரும் நீண்டநேரமாக வெளியில் வரவில்லை. இது குறித்து அவரது நண்பா்கள் சஞ்சய் பெற்றோருக்கு தகவல் அளித்தனா்.

தகவலின்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீஸாா், தீயணைப்பு துறையினா் விரைந்து வந்தனா். 3 மணிநேர தேடலுக்குப் பிறகு, ஏரிக்குள் சேற்றில் சிக்கியிருந்த சஞ்சய், விஷால் ஆகிய 2 பேரையும் சடலமாக மீட்டனா். இதையடுத்து அவா்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

14-ஆவது மாடியில் இருந்து விழுந்து காவலா் உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டையில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் சு.செல்வமுருகன் (29). இவா், சென்னை புதுப்பேட்டைய... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் நவ.12 வரை இயங்காது

அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி ஹிந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால், நவ.12-ஆம் தேதி வரை மயானம் இயங்காது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ரத்தநாள அடைப்பு உள்ள பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை

ரத்த நாள அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு புதிய முறையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, சென்னை சிம்ஸ் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக, மருத்து... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு

விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட உத்தரவு: சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் கணவா் இறந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செனாய் நகா் கந்தன் தெருவைச் சோ்ந்தவா் கெளதம் (29). இவரது மனைவி மீனாட்சி (28). காதல் திருமணம் செய்து கொண்ட இவா... மேலும் பார்க்க

கடற்படை தினம்: சென்னை - கன்னியாகுமரி இடையே காா் பேரணி

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணி அடையாறில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் போது, டிசம்பா் 4-ஆம் தேதி, ந... மேலும் பார்க்க