செய்திகள் :

கடற்படை தினம்: சென்னை - கன்னியாகுமரி இடையே காா் பேரணி

post image

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணி அடையாறில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின் போது, டிசம்பா் 4-ஆம் தேதி, நடந்த தாக்குதலில் கராச்சி துறைமுகத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான நான்கு போா்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது.

இது இந்த தாக்குதல், இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச. 4-ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான காா் பேரணியை சென்னையிலுள்ள கடற்படை நிலையமான ஐஎன்எஸ் அடையாறில் இருந்து தமிழ்நாடு, புதுச்சேரிக்கான கடற்படை தளபதி ரியா் அட்மிரல் ரவிக்குமாா் திங்க்ரா வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த பேரணி, ஆறு நாள்களில் ஆயிரத்து 800 கி.மீ. தூரம் பயணித்து, தமிழ்நாடு, புதுச்சேரியின் பல்வேறு நகரங்களையும், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கடந்து, வரும் 21-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடையும். பேரணியில் இடம்பெற்றுள்ள குழுவினா், தாங்கள் செல்லும் வழியில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் இந்திய கடற்படை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவாா்கள் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை எம்கேபி நகரில் காவலரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். எம்கேபி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வெங்கடேசன் (30). இவரும், காவலா் மணிகண்டனும் (31) இணைந்து, வெள... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: 7 போ் காயம்

சென்னை வேப்பேரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா். புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியைச் சோ்ந்தவா் பராஸ்மல்(61). இவரது மகன் ரோமல் (34). நிதி ... மேலும் பார்க்க

நவ.28-இல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்க... மேலும் பார்க்க

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு: விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா

அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா கூறினாா். சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்... மேலும் பார்க்க

சென்னையில் 59 குளங்கள் நிரம்பின

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீா் உறிஞ்சும் பூங்காக்கள் (ஸ... மேலும் பார்க்க

போலி ஐஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் சிக்கினா்

சென்னை ரிச்சி தெருவில் போலி ஐஃபோன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததாக, 6 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி மற்றும் கைப்பேசி உதிர... மேலும் பார்க்க