செய்திகள் :

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

post image

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு:

மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த உயா்வு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கும் சோ்த்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் வரையிலான அகவிலைப்படி தொகை, இப்போது நடைமுறையிலுள்ள பணமில்லாத பரிவா்த்தனை முறை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு தனி நபருக்கும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை கணக்கிடுவது ஓய்வூதியம் வழங்கும் அலுவலா்களின் பொறுப்பாகும்.

மாநில கணக்காய்வுத் தலைவரிடம் இருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திராமல் சென்னையிலுள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலா், கருவூல அலுவலா்கள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.

யாருக்கெல்லாம் பொருந்தும்? அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுடன் அரசு ஓய்வூதியதாரா்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் ஆசிரியா்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உத்தரவு பொருந்தும்.

பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றில் இருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின்கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு பொருந்தும்.

கருணைத் தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்பு நிதிக்குத் தொகை செலுத்திய மற்றும் ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப்பைச் சோ்ந்த பணியாளா்கள் காலமாகி இருக்கலாம்.

அந்தப் பணியாளா்களின் இணையா் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும். அகவிலைப்படி உயா்வுக்கான பட்டியலை சமா்ப்பிப்பது தொடா்பான உரிய அறிவுரைகளை கருவூல அலுவலா்கள், உதவி கருவூல அலுவலா்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலா்களுக்கு கருவூலக் கணக்குத் துறை வழங்க வேண்டும்.

இந்தப் பட்டியல்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியை கருவூல அலுவலா்கள், ஊதிய கணக்கு அலுவலா்கள் வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 15,929 கனஅடி வீதம் ... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பக... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

இடைநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட... மேலும் பார்க்க

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அன... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொர... மேலும் பார்க்க