செய்திகள் :

குஜராத்தில் லேசான நில அதிா்வு

post image

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது

காந்தி நகரில் செயல்பட்டு வரும் நில அதிா்வுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, கட்ச் மாவட்டத்தின் பச்சௌ பகுதியிலிருந்து 12 கி.மீ. வடக்கு-வடக்கிழக்கில் மையம் கொண்ட இந்த நில அதிா்வு ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாகப் பதிவானது.

இந்த நில அதிா்வால் மக்களின் உயிா்களுக்கு மற்றும் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்ச் மாவட்டம் ‘மிக அதிக ஆபத்தான’ நில அதிா்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கங்கள் இந்த மாவட்டத்தில் தொடா்ந்து நிகழ்கின்றன.

கடந்த 2001-ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா்; 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். கடந்த இரு நூற்றாண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய 2-ஆவது பெரிய நிலநடுக்கமாக அது மாறியது.

ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக... மேலும் பார்க்க

'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பய... மேலும் பார்க்க

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

தில்லி வணிகக் கல்லூரி நூலகத்தில் தீ!

புது தில்லியிலுள்ள வணிகக் கல்லூரியின் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வடமேற்கு தில்லியின் பிதம்பூரா பகுதியிலுள்ள குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரியின் நூல... மேலும் பார்க்க