செய்திகள் :

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

post image

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில் இருக்கும் அவசார் நிறுவனத்தில் சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட சிறப்புப் படை மற்றும் சூரத் காவல்துறையினர் இணைந்து நேற்று (அக். 20) இரவு நடத்திய சோதனையில் அந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 14.10 லட்சம் மதிப்பிலான 141 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 427 கிலோ அளவிலான சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

கடந்த அக். 13 அன்று அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில் குஜராத் மற்றும் தில்லி காவல்துறையினரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 500 கிலோ அளவிலான கொகைன் பிடிபட்டு ஒரு வாரத்தில் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தில்லியில் சில வாரங்களுக்கு முன்பு 562 கிலோ கொகைன் மற்றும் 40 கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த அக். 10 அன்று 208 கிலோ கொகைனை ரமேஷ் நகரிலுள்ள் கடையில் வைத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இந்த போதைப் பொருள்கள் பார்மா சொல்யூசன்ஸ் எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையிலுள்ள அவ்கார் மருந்து நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தல... மேலும் பார்க்க

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி... மேலும் பார்க்க

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துற... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது, மக்களைக் குறிவைத... மேலும் பார்க்க