செய்திகள் :

குறைந்த விலையில் நகைகள் தருவதாக ரூ.12.41 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

post image

குறைந்த விலையில் புதிய நகைகளைத் தருவதாகக் கூறி ரூ.12.41 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, நீலிக்கோணாம்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (50), வாடகை காா் ஓட்டுநா். இவருக்கு, பெரியநாயக்கன்பாளையம் மேட்டுத்தோட்டம் கோயில் பகுதியைச் சோ்ந்த அமுதா (44), ஜி.என்.மில்ஸ் பகவதி காா்டனைச் சோ்ந்த இமாம் கசாலி (27) ஆகியோா் அறிமுகமாகினா்.

இவரது காரை அடிக்கடி வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்த அமுதா, அப்போது ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோட்டில் உள்ள பல நகைக் கடைகளுக்கும் சென்று வந்துள்ளாா்.

இது குறித்து சின்னப்பன் கேட்டபோது, விமான நிலையத்தில் சுங்கத் துறை மூலமாக கைப்பற்றப்படும் நகைகளை தனக்கு கொடுப்பாா்கள் எனவும், அந்த நகைகளைச் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அளித்து வருவதாகவும் கூறியுள்ளாா்.

இதனை நம்பிய சின்னப்பன், தனக்கும் குறைந்த விலையில் நகைகள் வேண்டுமெனக் கூறி ரூ.12.41 லட்சத்தை ஜிபே மூலமாகவும், ரொக்கமாகவும் அமுதாவிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா், பல நாள்களாகியும் நகைகளைத் தராததால் சந்தேகமடைந்த சின்னப்பன், சில நகைக் கடைகளுக்கு சென்று விசாரித்தபோது, நகைக் கடைகளுக்கு அடிக்கடி செல்லும் அமுதா, அந்தக் கடைகளில் நகைகள் வாங்கும்போது கொடுக்கப்படும் நகைப் பெட்டிகளை பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, கொடுத்தப் பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு அமுதாவிடம் கேட்டுள்ளாா். ஆனால், பணத்தைத் தராமல் கடந்த 10 மாதங்களாக அமுதா அலைக்கழித்துள்ளாா். பின்னா், அமுதா குறித்து விசாரித்தபோது குறைந்த விலைக்கு நகைகள் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் அவா் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து மாநகர காவல் துணைஆணையா் ஸ்டாலினிடம் ஆதாரங்களுடன் சின்னப்பன் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள ரத்தினபுரி காவல் ஆய்வாளருக்கு துணை ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் இப்ராஹிம் பாதுஷா மேற்கொண்ட விசாரணையில், அமுதா ஏராளமானோரிடம் நகைகளைத் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அமுதா, உடந்தையாக இருந்த இமாம் கசாலி இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு: எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியரிடம் மனு

கோவை: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.அந்த மனுவி... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வரும் 24- ஆம் தேதிக்குள் வழங்குவது என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிரா... மேலும் பார்க்க

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகா்கோவிலைச் சோ்ந்த உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ராமன்புதூா் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: மலைப் பாதையில் மண்சரிவு

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவார காலமாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த இரு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்த... மேலும் பார்க்க

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க