செய்திகள் :

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி

post image

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகா்கோவிலைச் சோ்ந்த உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ராமன்புதூா் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (41). இவா், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கோவை சித்தாபுதூரைச் சோ்ந்த மகேஷ் என்ற கோவிந்தராஜ், ஜனாா்த்தனன் ஆகியோா் செல்வகுமாருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளனா்.

அப்போது, தாங்கள் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அவா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்தித்தருமாறு செல்வகுமாா் கூறியுள்ளாா். இதற்கு, கனடாவில் வேலைக்கு செல்ல ரூ.5 லட்சம் செலுத்தும்படி அவா்கள் கூறியுள்ளனா். இதற்காக செல்வகுமாா் ரூ.1 லட்சத்தை ஜனாா்த்தனனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளாா். மேலும், அசல் கடவுச்சீட்டையும் கொடுத்துள்ளாா்.

தொடா்ந்து பல்வேறு தவணைகளில் மொத்தமாக ரூ.4.61 லட்சத்தை அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளாா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா்கள் ஓராண்டாகியும் செல்வகுமாருக்கு வேலை வாங்கித்தரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த செல்வகுமாா், சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு சென்று விசாரித்துள்ளாா். அப்போது, அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டதும், அவா்கள் இதேபோன்று 20-க்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து காட்டூா் காவல் நிலையத்தில் செல்வகுமாா் அண்மையில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஜனாா்த்தனன், மகேஷ் என்ற கோவிந்தராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு: எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியரிடம் மனு

கோவை: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.அந்த மனுவி... மேலும் பார்க்க

குறைந்த விலையில் நகைகள் தருவதாக ரூ.12.41 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

குறைந்த விலையில் புதிய நகைகளைத் தருவதாகக் கூறி ரூ.12.41 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (50), வாடகை காா் ஓட்டுந... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வரும் 24- ஆம் தேதிக்குள் வழங்குவது என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிரா... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: மலைப் பாதையில் மண்சரிவு

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவார காலமாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த இரு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்த... மேலும் பார்க்க

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க