செய்திகள் :

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

post image

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், சாலை விபத்துகளில் கிட்டத்திட்ட 1.73 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளொன்றுக்கு 474 பேரும், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்த தொடங்கியதில் இருந்து, கடந்தாண்டே அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்தாண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இது 2022-ஐ ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாக சாலைப் போக்குவரத்து அமைச்சகமும், 1.71 லட்சம் பேர் உயிரிழந்ததாக தேசிய குற்றப் பதிவு ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. 2023-க்கான அறிக்கையை இதுவரை இரு துறைகளும் வெளியிடவில்லை.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கடந்த 5 ஆண்டுகள் தரவுகளை ஒப்பிடுகையில், கரோனா ஊரடங்குக்கு பிறகு 2021ஆம் ஆண்டு முதல் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

2021-ல் 4.12 லட்சம் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1.54 லட்சம் உயிரிழப்பும், 3.84 லட்சம் பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளன. 2023-ல் 4.8 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 1.73 லட்சம் உயிரிழப்பும், 4.63 லட்சம் பேர் காயமும் அடைந்துள்ளனர்.

இதில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

அதேவேளையில், கேரளம், ஆந்திரம், பிகார், தில்லி மற்றும் சண்டீகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்தாண்டு குறைந்துள்ளன.

தமிழகம் இரண்டாமிடம்

உத்தரப் பிரதேசத்தில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிரத்தில் 15,366 பேரும் சாலை விபத்துகளால் கடந்தாண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம்(72,292) முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம்(55,769) மற்றும் கேரளம்(54,320) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

இதையும் படிக்க : ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

தலைக்கவசம் அணியாத 70% பேர் மரணம்

2023-ஆம் ஆண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களில் கிட்டத்திட்ட 76,000 பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். அவர்களின் 70 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நகர்ப்புற வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைப்பதை கட்டாய விதிமுறையாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க

நவ.1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்! முன்கூட்டியே மிரட்டல்

ஏர் இந்தியா விமானங்களில் நவ. 1 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.என்ன சொல... மேலும் பார்க்க

உ.பி., இடைத்தேர்தலில் சமாஜவாதி மிகப்பெரிய வெற்றி பெறும்: டிம்பிள் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க