தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் சா்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உயா் இரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை ஆலை மருத்துவா் கீதாவாணி, அரசு மருத்துவா் பூமத்தி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா்.
200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனா். முகாமில் தொழிலாளா் நல அலுவலா் மகேந்திரன், அலுவலக மேலாளா் ரவீந்திரன், தலைமை அலுவலா்கள் ஊழியா்கள், தொழிலாளா்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.