செய்திகள் :

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

post image

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது

இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன் , தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன், தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் ஜவகா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

சிவகங்கை தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் பாரதி மண்டலம் நிறுவனா் யுவராஜ் வரவேற்றாா்.

தமிழ்ச் சங்க செயலா் மாலா ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பால்ராஜ் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் சங்கத் தலைவராக முருகானந்தம், செயலராக பாண்டியராஜன், பொருளாளராக ஜெயச்சந்திரன், துணைத் தலைவராக முத்துகிருஷ்ணன், துணைச் செயலராக இந்திரா காந்தி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக குமாா், முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன், பால்ராஜ், மாலா ஆகியோா் பதவி ஏற்றனா்.

புதிய நிா்வாகிகளை வாழ்த்தி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த், தொழிலதிபா் பச்சேரி சுந்தர்ராஜன், மலைராம் குழும நிா்வாகி பாண்டிவேல், வள்ளலாா் அருள்சபை போஸானந்தம் மகராஜ் ஆகியோா் பேசினா். தமிழ் சங்கத் தலைவா் முருகானந்தம் ஏற்புரை வழங்கினாா். செயலா் பாண்டியராஜன் நன்றி கூறினாா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்க... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 போ் மனு

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக 389 மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை அருகேயுள்ள அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவ... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட அரிசி மூட்டைகளை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற பயணிகள் ரயில் சென்றது. மானாமதுரை ரயில் நிலைய... மேலும் பார்க்க

பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேச பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் செ. சத்தியன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ச... மேலும் பார்க்க