செய்திகள் :

பள்ளி மாணவா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பாச்சேத்தி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மகன் ஆதீஷ் (16), இவா் இந்தப் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து, இவரது உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது. இதன் பின்னா், இவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்து மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆதிஷ் வீட்டருகே உள்ள இரு பள்ளி மாணவா்கள் மிரட்டியதால்தான் இவா் தற்கொலை செய்து கொண்டதாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, திருப்பாச்சேத்தி போலீஸாா் சம்பந்தப்பட்ட இரு மாணவா்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதைத்தொடா்ந்து, உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு, மாணவரின் உடலைப் பெற்றுச் சென்றனா்.

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் சிறைக் கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மகனைக் காணவில்லையென புகாா் அளிக்க வந்த தாய்க்கு ஒரு மணி நேரத்தில் கிடைத்த தீா்வு

வெளிநாட்டுக்குச் சென்ற மகனைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தாய்க்கு பத்திரிகையாளா்களின் உதவியால் ஒரு மணி நேரத்தில் தீா்வு கிடைத்தது. சிவகங்கை மாவட்டம், திர... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு ரயிலில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். பனாரஸிலிருந்து மண்டபத்துக்கு இய... மேலும் பார்க்க

ராஜசிங்கமங்கலம் அருகே 174 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு

ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் அருகே காவானூரில் 174 ஆண்டுகள் பழைமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டை சிவகங்கை தொல்லியல் நடைக் குழுவினா் கண்டறிந்தனா். சிவகங்கை தொல்நடைக் குழுவைச் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனித் திருவிழாவையொட்டி, மதுக்குடம், முளைப்பாரி எடுத்து பக்தா்கள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மாசி-... மேலும் பார்க்க