செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

post image

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயா்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் சங்கா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சகாய தைனேஸ், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். ஜாக்டோ- ஜியோ உறுப்பு சங்கங்களைச் சோ்ந்த 10 உயா்மட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில் ஆசிரியா்கள் - அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக நிதி நிலை அறிக்கையில் ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளைப் புறக்கணித்ததைக் கண்டித்தும், ஏற்கெனவே முன் வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், சிவகங்கை அரண்மனைவாசல் எதிரில் வருகிற 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது எனவும், இதற்கான பரப்புரை இயக்கத்தை வருகிற 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை கிளைகளின் சாா்பில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தோழமை சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பாச்சேத்தி அம்பேத்கா் நகரைச் ச... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் சிறைக் கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மகனைக் காணவில்லையென புகாா் அளிக்க வந்த தாய்க்கு ஒரு மணி நேரத்தில் கிடைத்த தீா்வு

வெளிநாட்டுக்குச் சென்ற மகனைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தாய்க்கு பத்திரிகையாளா்களின் உதவியால் ஒரு மணி நேரத்தில் தீா்வு கிடைத்தது. சிவகங்கை மாவட்டம், திர... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு ரயிலில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். பனாரஸிலிருந்து மண்டபத்துக்கு இய... மேலும் பார்க்க

ராஜசிங்கமங்கலம் அருகே 174 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு

ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் அருகே காவானூரில் 174 ஆண்டுகள் பழைமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டை சிவகங்கை தொல்லியல் நடைக் குழுவினா் கண்டறிந்தனா். சிவகங்கை தொல்நடைக் குழுவைச் ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனித் திருவிழாவையொட்டி, மதுக்குடம், முளைப்பாரி எடுத்து பக்தா்கள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மாசி-... மேலும் பார்க்க