செய்திகள் :

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

post image

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பெலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு இத்தீா்ப்பை வழங்கியது.

கடந்த 1944-ஆம் ஆண்டின் சுங்க சட்டம் மற்றும் மத்திய கலால் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதித்துறை நடுவரிடம் இருந்து வாரண்ட் பெற வேண்டும் என்று கடந்த 2011-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பைத் தொடா்ந்து, சுங்க சட்டப் பிரிவு 104-இன்கீழ் குறிப்பிட்ட சில வழக்குகளில் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.

இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டின் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வழக்குகளில் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளுக்கு எதிராக ராதிகா அகா்வால் என்பவா் உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். சுமாா் 280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களில் சுங்க சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் வழங்கும் பிரிவுகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம்- அரசமைப்புச் சட்டத்துடன் பொருந்தவில்லை என்றும், இப் பிரிவுகளை செல்லாதவையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை ஒருமனதாக தீா்ப்பளித்தது. தனது மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சாா்பில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 63 பக்க தீா்ப்பை எழுதினாா். இதே கருத்துக்கு இணக்கமாக 13 பக்க தனி தீா்ப்பை நீதிபதி பெலா எம். திரிவேதி எழுதினாா்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய பல தீா்ப்புகளை சுட்டிக் காட்டியுள்ள நீதிபதிகள், ‘சுங்கத் துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் அல்லா் என்றபோதிலும், உரிய சட்டங்களின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் அவா்களுக்கு உள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவுகள், நாட்டின் சட்டத்துக்கு இணக்கமானதாக உள்ளன. தன்னிச்சையான-தவறான கைது நடவடிக்கைகளை தடுப்பதற்குப் போதுமான பாதுகாப்பை, அந்தப் பிரிவுகள் வழங்குகின்றன’ என்றனா்.

அதேபோல், சம்பந்தப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் உரிமை குறித்தும் தீா்ப்பில் விளக்கமளித்துள்ள நீதிபதிகள், ‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகுதான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. பொருத்தமான சந்தா்ப்பங்களில் முன்ஜாமீன் மனுக்களை அனுமதிக்கலாம். நிபந்தனை அடிப்படையிலும் முன்ஜாமீன் வழங்கப்படலாம்’ என்று தெரிவித்துள்ளனா்.

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க