செய்திகள் :

"ஜி.டி. நாயுடு மேம்பாலத்திற்கு வெறும் 'ஜி.டி' என்றா பெயர் வைக்க முடியும்?" - தங்கம் தென்னரசு கேள்வி

post image

கடந்த 9-ம் தேதி, கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

அதற்கு முந்தைய தேதி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்கிற பெயர் வைத்தது சர்ச்சையாக எழுந்தது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்
கோவை அவிநாசி சாலை மேம்பாலம்
இந்த விமர்சனங்களுக்கு இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்...

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "முன்னேறிய நோக்கோடு, சமுதாய விழிப்புணர்வோடு, சமுதாயத்தில் இருக்கும் இழிநிலைகளைத் துடைத்தெரிய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கோடு முதலமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேறு வண்ணம் பூசுகிறார். இது கண்டிக்கத்தக்கது.

சில அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'ஏன் இவர்களது பெயரை வைக்கக்கூடாது?' என்று கேட்கிறார்.

குறிப்பிட்ட இந்தப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்படவில்லை. அதில் எடுத்துக்காட்டு பெயர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

விதிவிலக்கு

தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை வைத்திருப்பதை குறையாகக் கூறுகிறார்கள்.

ஜி.டி. நாயுடு மிகப்பெரிய விஞ்ஞானி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அடையாளமாக இருந்தார். அதனால், அவருடைய பெயரை மேம்பாலத்திற்கு வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால்தான், அவருடைய பெயர் மேம்பாலத்திற்கு வைத்துள்ளார்.

ஜி.டி நாயுடுவின் பெயரில் நாயுடு என்று இருப்பதால், வெறும் 'ஜி.டி' என்று மேம்பாலத்திற்குப் பெயர் வைக்க முடியுமா? இப்படி அவர் பெயர் வைத்தால் தான், அவர் இன்னார் என்று அறியப்படுவார்.

அவர்கள் எவ்வாறு அறியப்பாட்டார்களோ, அப்படியே பெயர் வைத்தால்தான் அவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். இவற்றை விதிவிலக்காகக் கருத வேண்டும்" என்று பேசியுள்ளார்.

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க