செய்திகள் :

டானா புயல் எங்கே கரையை கடக்கும்? வானிலை மையம் தகவல்

post image

வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் கரையை கடக்கும் இடம் குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

எங்கே கடக்கும்?

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிஸாவின் பாரதிப்புக்கு 210 கி.மி. தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 310 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த தீவிர புயல், இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் புரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே ஒடிஸாவின் பிதர்கனிகா மற்றும் தம்ராவுக்கு அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீவிர புயலானது கரையை கடக்கும்போது 120 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

முன்னெச்சரிக்கை தீவிரம்

டானா புயலை தொடர்ந்து, ஒடிஸா மற்றும் மேற்கு வங்க அரசுடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிஸாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.

புயலைக் கருத்தில் கொண்டு ஒடிஸா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

மரம் வெட்டும் கருவிகள், படகுகள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீட்புக் குழுக்கள் தயாா்நிலையில் உள்ளனா்.

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார். 1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் ... மேலும் பார்க்க

தீபாவளி முதல் மூன்று இலவச சிலிண்டர்கள்: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி: ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.இதையடுத்து, பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவச... மேலும் பார்க்க

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்... மேலும் பார்க்க

அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும்... மேலும் பார்க்க