செய்திகள் :

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு!

post image

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி துறை ரீதியாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

"தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம், மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 2,000, விற்பனையாளர்களுக்கு ரூ. 2,000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ. 2,000 என 1 ஆம் தேதி முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஒரு ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவாகும்" என்று அறிவித்தார்.

செல்போன் பறிமுதல் செய்த ஆசிரியரைத் தாக்கிய மாணவி!

ஆந்திரத்தில் செல்போனைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விசாகப்பட்டிண மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல... மேலும் பார்க்க

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா!

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுக... மேலும் பார்க்க

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியா... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறி... மேலும் பார்க்க

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார். தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ர... மேலும் பார்க்க