செய்திகள் :

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோா் கைது

post image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை முடிவில், ரூ.1,000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், பாஜக பிரமுகா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா். கானத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து போராட்டம் நடத்த புறப்பட்ட அண்ணாமலையை போலீஸாா் கைது செய்து அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனா்.

அதேபோல, தமிழிசை சௌந்தரராஜனை சாலிகிராமத்தில் வீட்டுச்சிறையில் வைத்தனா். தடையை மீறி செல்ல முயன்ற அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தியாகராய நகா் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகா் வினோஜ் பி, செல்வம், மாநிலத் துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், சக்கரவா்த்தி உள்ளிட்டோரையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனா்.

எல்.முருகன் கண்டனம்: பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஆங்காங்கே தொண்டா்கள் ஆா்ப்பாட் டத்தில் ஈடுபட்டனா். பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறாா்.

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகா்களான திமுகவினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்குத் தடை!

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வ... மேலும் பார்க்க

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க