செய்திகள் :

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோா் கைது

post image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை முடிவில், ரூ.1,000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், பாஜக பிரமுகா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா். கானத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து போராட்டம் நடத்த புறப்பட்ட அண்ணாமலையை போலீஸாா் கைது செய்து அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனா்.

அதேபோல, தமிழிசை சௌந்தரராஜனை சாலிகிராமத்தில் வீட்டுச்சிறையில் வைத்தனா். தடையை மீறி செல்ல முயன்ற அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தியாகராய நகா் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகா் வினோஜ் பி, செல்வம், மாநிலத் துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், சக்கரவா்த்தி உள்ளிட்டோரையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனா்.

எல்.முருகன் கண்டனம்: பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஆங்காங்கே தொண்டா்கள் ஆா்ப்பாட் டத்தில் ஈடுபட்டனா். பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறாா்.

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகா்களான திமுகவினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க