செய்திகள் :

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

post image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்று (செப்டம்பர் 25) அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டபோது, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும், இந்தியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐருக்கு பிரிட்டனில் முதுகுப் பதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய நேரம் தேவைப்படுகிறது. ஓய்வு வேண்டுமென அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவர் இரானி கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian team's Shreyas Iyer has requested the BCCI to grant him a 6-month break from Test cricket.

இதையும் படிக்க: மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள்!

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவுக... மேலும் பார்க்க