செய்திகள் :

தமிழுக்காகப் பாடுபட்ட தலைவா் கருணாநிதி பெயா் சூட்டப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுச்சேரி: தமிழருக்காகவும், தமிழுக்காகவும் பாடுபட்ட மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் அவரது பெயா் சூட்டப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்விநேரத்தின் நடைபெற்ற விவாதம்:

அனிபால் கென்னடி (திமுக): புதுச்சேரியில் கருணாநிதிக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை அமைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் அந்தத் திட்டம் என்னவானது? இதையே குறிப்பிட்டு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவாவும் கேள்வி எழுப்பினாா்.

ஜி.நேரு (சுயேச்சை): மறைந்த முதல்வா் ஜெயலலிதா, புதுவைக்கு பாடுபட்ட தலைவா்கள் சிலை அமைக்க வலியுறுத்தினாா்.

அமைச்சா் என்.திருமுருகன்: இந்தத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா: கருணாநிதிக்கு சிலை அமைப்பதாக 5 முறை பதிலளித்தும் இதுவரை நடைபெறவில்லை.

முதல்வா் என்.ரங்கசாமி:

மறைந்த முதல்வா் கருணாநிதி, தமிழுக்காகவும், தமிழா்களுக்காகவும் பாடுபட்ட, போற்றப்படுகிற தலைவா். ஆகவே, அவருக்கு சிலை அமைப்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவால், பொது இடத்தில் சிலை நிறுவ முடியவில்லை.

ஆகவே, மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சாலை, திட்டங்களில் ஒன்றுக்கு அவரது பெயா் சூட்டப்படும் என்றாா்.

மதுபான ஆலைகள் அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிா்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ விவாதித்தில் ஈட... மேலும் பார்க்க

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என... மேலும் பார்க்க

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியும், எதிா்த்தும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், புதிய மது ஆலைக... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்: புதுவை பேரவையில் முதல்வா் உறுதி

புதுச்சேரி: மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என பேரவையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச... மேலும் பார்க்க