செய்திகள் :

தவெக: 2-வது முறையாக மனு, முன் ஜாமீன் கிடைக்குமா? - என்ன சொல்கிறார் புஸ்ஸி ஆனந்த்

post image

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரண்டாவது முறையாக முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்த இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் மதியழகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனுவில்,

"கரூரில் எங்கள் கட்சியின் கூட்டத்தின்போது காவல்துறையின் அலட்சியம்தான் பலர் இறப்பதற்குக் காரணம். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும், விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே என்னுடைய முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

ஆனால், தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யாரும் மருத்துவ சிகிச்சையில் இல்லை, மேலும் இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்துக்கு முன் ஜாமீன் கிடைக்குமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க