செய்திகள் :

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

post image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டிலேயே கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். பின்னர் சுந்தர், ராணியை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருடன் ராணி சேர்ந்து வாழ்ந்தார். இதில், ராணிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கதிரேசனும் ராணியை பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன் எனபவருடன் ராணிக்கு உறவு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

Murder (representational image)

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட ஆத்திரத்தில் ராணியை முருகன் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ராணி உயிரிழந்தார். இதையடுத்து முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மணிமுத்தாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “ராணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது தனிமையில் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடனான பழக்கத்தை கைவிடும்படி ராணியிடம் கூறினேன். அதைக் கேட்காததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆற... மேலும் பார்க்க

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ... மேலும் பார்க்க

`ஆபரேஷன் அகழி' : சாவி தர மறுப்பு; கிரேன் மூலம் லாக்கரையே தூக்கிய போலீஸ் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆபரேஷன் அகழிதிருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மா... மேலும் பார்க்க