செய்திகள் :

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

post image

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஹோட்டலின் மாடியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மகாலிங்கம், ஹோட்டல் ஊழியர்கள் சிலர், நேபாள சிறுவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று ஏன் உங்களது நண்பரை இங்கு அழைத்து வந்தீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது மூன்று சிறுவர்களையும் மகாலிங்கம் உள்பட சில ஹோட்டல் ஊழியர்கள், கட்டை, இரும்பு கம்பி, பிரியாணி கரண்டி ஆகியவற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு சிறுவர்கள் தங்கியிருந்த அறையையும் பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தமிழரசன்

அதனால் அறைக்குள் அடைப்பட்ட மூன்று சிறுவர்களும் ஜன்னல் வழியாக அங்கிருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயன்றனர். இதில் சிறுவர்களின் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் சிறுவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மருத்துவமனையிலிருந்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் ஹோட்டல் உரிமையாளர் மகாலிங்கம், அங்கு வேலை செய்யும் சாலிகிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், திருவாரூர், பரவாக்கோட்டையைச் சேர்ந்த நாகப்பன் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சிறுவர்களை வேலையில் பணியமர்த்தியது தொடர்பாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ... மேலும் பார்க்க

`ஆபரேஷன் அகழி' : சாவி தர மறுப்பு; கிரேன் மூலம் லாக்கரையே தூக்கிய போலீஸ் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆபரேஷன் அகழிதிருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மா... மேலும் பார்க்க