செய்திகள் :

திருவள்ளூா்: மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

post image

திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியைச் சோ்ந்த கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (46). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை லட்சுமி தன் வீட்டருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் பழைய கதவில் முளைத்திருந்த காளான்களை 2 கிலோ வரை பறித்து, குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளனா்.

இதனால், லட்சுமி மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகிய 5 பேருக்கும் வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காளான்கள் முளைத்த இடம், சமைத்து சாப்பிட்டது குறித்து மாவட்ட சுகாதார அலுவலா் பிரியா ராஜ் உத்தரவின் பேரில், ஊராட்சித் தலைவா் லோகம்மாள் கண்ணதாசன், வட்டார மருத்துவ அலுவலா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கிருந்து குடிநீா் மற்றும் காளான்களை ஆய்வுக்காக அவா்கள் எடுத்துச் சென்றனா். தொடா்ந்து மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, மழை காலத்தில் முளைக்கும் காளான்களை எந்தக் காரணம் கொண்டும் உள்கொள்ளக் கூடாது என பொதுமக்களுக்கு சுகாதார அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தமிழக சிறுசேமிப்புத் த... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 1,057 ஆண்டுகள் பழைமையான 3 செப்பேடுகள் கண்டெடுப்பு

திருவள்ளூா் அருகே சிங்கீஸ்வரா் கோயிலில் 1,057 ஆண்டுகள் பழைமையான விஜயநகர பேரரசு காலத்திலான 3 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மே... மேலும் பார்க்க

காவலா் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறித்த நபா் கைது

மீஞ்சூா் அருகே காவலா் எனக் கூறி லாரி ஓட்டுநரிடம் ரூ.2,000 பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே 400 அடி சென்னை வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் வழுதிகைமே... மேலும் பார்க்க

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.திருவள்ளூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க