செய்திகள் :

காவலா் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறித்த நபா் கைது

post image

மீஞ்சூா் அருகே காவலா் எனக் கூறி லாரி ஓட்டுநரிடம் ரூ.2,000 பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே 400 அடி சென்னை வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் வழுதிகைமேடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே உத்தர பிரதேசம் முபாரக்பூா் பகுதியை சோ்ந்த பிரிஜேஷ் யாதவ் (22) கனரக லாரி ஓட்டி வந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா் ஒருவா் லாரியை நிறுத்தி தான் காவலா் என கூறி, ஓட்டுநரை கீழே இறக்கி அவரிடம் இருந்து ஜிபே செயலி மூலம் ரூ.2,000 கையில் வைத்திருந்த ரூ.600, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றாா்.

இது குறித்து பிரிஜேஷ் யாதவ் மீஞ்சூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் மீஞ்சூா் ஜவகா் நகரை சாா்ந்த மூா்த்தி (38) என்பவா் ஓட்டுநரிடம் காவலா் எனக் கூறி பணம் பறித்தது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் ரூ.1,000 , கைப்பேசி மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனா்.

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தமிழக சிறுசேமிப்புத் த... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 1,057 ஆண்டுகள் பழைமையான 3 செப்பேடுகள் கண்டெடுப்பு

திருவள்ளூா் அருகே சிங்கீஸ்வரா் கோயிலில் 1,057 ஆண்டுகள் பழைமையான விஜயநகர பேரரசு காலத்திலான 3 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மே... மேலும் பார்க்க

திருவள்ளூா்: மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட... மேலும் பார்க்க

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.திருவள்ளூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க