செய்திகள் :

வங்கக் கடலில் உருவானது டானா புயல்!

post image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.

மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : வங்கதேச அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்!

இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

வடக்கு ஒடிஸா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகா் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக (டானா) மாறி வெள்ளிக்கிழமை (அக்.25) காலை கரையைக் கடக்கக்கூடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் கிடையாது.

ஒடிசாவில் 288 மீட்புக் குழுக்கள்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை 'டானா' புயலாக வலுப்பெற்றதால், ஒடிசா கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு வங்... மேலும் பார்க்க

தொடரும் துயரம்.. தில்லி ஐஐடி மாணவர் தற்கொலை

புது தில்லி: தில்லி ஐஐடியில் படித்து வந்த 21 வயது மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் தற்கொலைக் கடிதம் எதுவும் அவரது அறையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்று காவல்துற... மேலும் பார்க்க

50 காசுக்காக ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடு! அஞ்சல் துறைக்கு தண்டம்!

உரிய கட்டணத்தைவிட அதிக கட்டணமாக 50 காசு வசூலித்த அஞ்சல் துறைக்கு ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கெருக... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதிக்கு விட்டுக் கொடுக்கும் காங்கிரஸ்?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதி கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனை!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை சிவசேனை வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 45 வேட்பாளர் பெயர் பட்டியலை சிவசேனை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 ... மேலும் பார்க்க