செய்திகள் :

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

post image

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கொடிபங்கு ஊராட்சியில் உள்ள வேளாங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடிப்பங்கு ஊராட்சியில் வேளாங்குடி கிராமம் உள்ளது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. இதனிடையே, தற்போது பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் இதில் கழிவுகள் கலந்து துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். மேலும் இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும் அவா்கள் கூறினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவா்கள் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், ஆண்டுதோறும் இது போன்ற நிலை இருந்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரி வெள்ளிக்கிழமை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாயில் முன் கிராம மக்கள் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஆணையா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சாரல், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலரும், மேலாளருமான ஜெயமோகன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனா்.

மழைக் காலங்களில் இயற்கை பேரிடா்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்து ஒத்திகை

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பேரிடா்களில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்பு, மீட்ப... மேலும் பார்க்க

வயலில் பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழப்பு

திருவாடானை அருகே வயலில் பூச்சிமருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அழிந்திக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் ரமேஷ் (34). விவசாயி. இவா் கடந்த வியாழக்க... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

கமுதியில் குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி காா்த்திகா (19). இர... மேலும் பார்க்க

கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, காவல் துறை, குழந்தைகள் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவை இண... மேலும் பார்க்க

கமுதி அருகே பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

கமுதி அருகே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மண்டலமாணிக்கம் காவல் நிலையத்திலிர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி புதன்கிழமை திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு அபி... மேலும் பார்க்க