செய்திகள் :

தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

post image

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் பண்டிகை காலங்களில் ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 7,000 ரயில்கள் இயக்கப்படும் என்று இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

இதன் மூலமாக தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும், ரயில்களில் நெரிசலைக் குறைக்கவும் மக்கள் எளிதாக ஊருக்குச் செல்லவும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் சில ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வடக்கு ரயில்வே இந்தாண்டு 3,050 நடைகள் சிறப்பு ரயில்களை இயக்கியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 1,082 ஆக இருந்தது.

ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல்! 3 வீரர்கள் உள்பட 5 பேர் காயம், ஒருவர் பலி!

ஜம்மு- காஷ்மீரின் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க் அருகே உள்ள போடா... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11ஆம் தேதி சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்... மேலும் பார்க்க

மசூதியை இடிக்கக் கோரிய போராட்டத்தில் போலீஸார் மீது கல்வீச்சு!

உத்தரகண்ட்டில் மசூதியை இடிக்கக் கோரிய போராட்டத்தில் தடுப்புகளை அகற்ற மறுத்த போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.உத்தரகண்ட்டில் உள்ள உத்தரகாசியில் மசூதியின் சட்டப்பூர்வத்தன்மை குறித்... மேலும் பார்க்க

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, கடந்த 2022... மேலும் பார்க்க

அமராவதிக்கு ரயில் சேவை: ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு!

ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவைக்காக மத்திய அரசு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ... மேலும் பார்க்க