பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்
வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
பேட்ஸ்மேன்களுக்கு அதிக பொறுப்பு தேவை
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில், வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்!
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது, போட்டி வங்கதேசத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால், முதல் நாளின் இரண்டாவது செஷனில் நாங்கள் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குறைவாக எடுத்தது பந்துவீச்சாளர்களின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, அவரைத் தொடர்ந்து களமிறங்கும் பேட்ஸ்மேன்களின் வேலை மிகவும் எளிதாக மாறுகிறது. குறைவான ரன்களுக்கு ஆட்டமிழப்பது பந்துவீச்சாளர்களின் வேலையை மிகவும் கடினமாக்குகிறது. அழுத்தமான சூழல்களில் விளையாடுவதை எப்போதும் விரும்புவேன். ஏனெனில், அழுத்தமான சூழலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி அணியின் ஹீரோவாக மாறலாம் என்றார்.
இதையும் படிக்க: டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
இரண்டாவது இன்னிங்ஸில் மெஹிதி ஹாசன் மிராஸ் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.