செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், உச்ச நீதிமன்றம், அஜித் பவார் அணிக்கு, நீதிமன்றத்தைன் முந்தைய உத்தரவுகளை பின்பற்றுமாறும், தங்களது தேர்தல் விளம்பரங்களில், இதுதொடர்பான தகவலையும் தெளிவுபடுத்த வேண்டும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னத்தை, அஜித் பவார் அணிக்கு வழங்கி, தேர்தல் ஆணையம் அளித்த முடிவினை எதிர்த்து சரத் பவார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதையும் படிக்க.. உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சிலிருந்து பிரிந்து பாஜகவுக்கு ஆதரவளித்ததால் அஜித் பவார் அணி உருவானது. அதாவது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். மேலும், 40 எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தனக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அஜித் பவார் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தனக்குச் சொந்தமானது என்று கூறி கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினார் அஜித் பவார். ஆதரவாளர்களின் விவரங்களைக் கோரிய தேர்தல் ஆணையம், அஜித் பவார் அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை வழங்கியது. மகாராஷ்டிர மாநில தேர்தலிலும் கட்சியின் சின்னமான கடிகார சின்னம் அஜித் பவார் அணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொ... மேலும் பார்க்க

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, கடந்த 2022... மேலும் பார்க்க

அமராவதிக்கு ரயில் சேவை: ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு!

ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவைக்காக மத்திய அரசு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவ... மேலும் பார்க்க

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார். 1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் ... மேலும் பார்க்க