செய்திகள் :

இந்தியா - நியூசி டெஸ்ட்: தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்!

post image

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, போதிய தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.

நியூசிலாந்து - 259/10

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரசிகர்கள் கோபம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டியைக் காண கிட்டத்தட்ட 18,000 பேர் வந்துள்ளனர். அவர்களில் பலரும் மைதானத்தில் மேற்கூரை இல்லாததால், சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு போட்டியை கண்டு களித்தனர். போட்டியின் முதல் ஷெஷன் முடிவில் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்காக சென்றபோது, தண்ணீர் பாட்டில்கள் போதிய அளவில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியத்துக்கு மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

இது தொடர்பாக மகாராஷ்டிர கிரிக்கெட் வாரிய செயலர் கமலேஷ் பிசால் பேசியதாவது: ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு எங்களது மன்னிப்பினை கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் நாள்களில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல், ரசிகர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தண்ணீர் தட்டுப்பாட்டை நாங்கள் ஏற்கனவே சரிசெய்துவிட்டோம். ஆனால், அதிக அளவிலான தண்ணீர் பாட்டில்கள் தேவைப்பட்டாதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசி.க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ரகசியத்தை வாஷிங்டன் சுந்தர் பகிர்ந்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புண... மேலும் பார்க்க

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட... மேலும் பார்க்க

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ் பகிர்ந்த மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம்!

மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடர் வருகிற நவம்பர் ம... மேலும் பார்க்க

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி பயத்தின் காரணமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய... மேலும் பார்க்க

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க