பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்
விளையாட்டை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை: மு.க. ஸ்டாலின்
எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 24) தெரிவித்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை–2024 மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட அணிகளுக்கு முதல்வர் கோப்பையை வழங்கி, பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டு உடல் வலிமை மன வலிமையைத் தரக்கூடியது; இதனால் விளையாட்டை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்
எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.