செய்திகள் :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

post image

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.40 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் மெல்ல உயா்ந்து 29 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது. அணை நீா்மட்டம் புதன்கிழமை 98.56 அடியிலிருந்து 100.01 அடியாக உயா்ந்தது.

இதையும் படிக்க |அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்!

இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 100.01 அடியில் இருந்து 101.40 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 17,586 கனஅடியிலிருந்து 29,850 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 66.66 டி.எம்.சி.யாக உள்ளது.

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் க... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றியவா் உமறுப்புலவா் -இபிஎஸ் புகழாரம்

தமிழக இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய உமறுப்புலவரைப் போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இறைத... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்குகள் காணொலியில் விசாரணை -உயா்நீதிமன்றம்

விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தம்பதியரை நேரில் ஆஜராகும்படி கட்டாயப்படுத்தாமல், காணொலியில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தீபாவளி: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள் -துணை முதல்வா் உதயநிதி

பண்டிகைக் காலங்களையொட்டி, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை மக்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: உருவ கேலி செய்து சிக்கிய செளந்தர்யா! ரசிகர்கள் எதிர்ப்பு!

பிக் பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு சீசனிலும் உருவ கேலி என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இம்முறை செளந்தர்... மேலும் பார்க்க