செய்திகள் :

நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

post image

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (அக்.24) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை புயலாக வலுப்பெற்று, ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரை இடையே வெள்ளிக்கிழமை (அக்.25) அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க |தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், நாகை - இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழிற் தேர்வில் 29 மாணவ, மாணவியர் முதலிடம்: முதல்வரை சந்தித்து வாழ்த்து

சென்னை: தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர்கள் மற்றும் பயிற... மேலும் பார்க்க

கோவையில் நடுரோட்டில் பற்றியெரிந்த பேருந்து: பயணிகள் அதிர்ச்சி

கோவையில் ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இறங்கியதால் நல்லவாய்ப்பாக அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. கோவையிலிருந்து வியாழக்கி... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ம... மேலும் பார்க்க

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச... மேலும் பார்க்க

மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க