செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்

post image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்ட விதிகளின் அடிப்படையில் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 13 தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிரியங்கா வேட்புமனுதாக்கல்

தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க., சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு தொகுதிக்கு வருகை தந்துள்ள பிரியங்கா காந்தி நேற்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி இறந்தபோது சகோதரி பிரியங்கா காந்திக்கு 17 வயது. தாய் சோனியா மட்டுமின்றி மொத்த குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்தார்.

பிரியங்கா வேட்புமனுதாக்கல்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சகோதரி பிரியங்கா காந்தியை என்னுடைய இரண்டாவது தாயாக நான் பார்க்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டதைப் போலவே என்னுடைய இரண்டாவது தாயையும் வயநாடு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தாய் வீட்டிற்கு வருவதைப் போல எப்போது வேண்டுமானாலும் வயநாட்டிற்கு வருவேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

உ.பி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்குச் சைக்கிள் சின்னம்; அகிலேஷ் ட்வீட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்ச... மேலும் பார்க்க

"நான் கூட்டணிக் கட்சிப்பா... என் மேலேயே ரெய்டா?" - கொதித்த வைத்திலிங்கம்; அதிரடித்த அமலாக்கத்துறை

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம் மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது அமலாக்கத்துறை. 2011-16 அ.தி.மு.க ஆட்சிக்கால... மேலும் பார்க்க

"உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது" - உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

"நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்..." என்று அ.தி.மு.க., முன்னா... மேலும் பார்க்க

Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்... எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் தொகுத... மேலும் பார்க்க

Vaithiyalingam -க்கு BJP வார்னிங் - அமலாக்கத்துறை ரெய்டு பின்னணி! | ED raid news | OPS

வைத்திலிங்கம் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு டி.வி.ஏ.சி.யால் தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்... மேலும் பார்க்க

வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா?

ஏறுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் வைத்திலி... மேலும் பார்க்க