செய்திகள் :

"உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது" - உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

post image

"நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்..." என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க.,வின் 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 23) தேனி மேற்கு மாவட்டம் சார்பில் போடிநாயக்கனூரில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிளைக் கழக செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கி ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று கழகத்தின் பொதுச்செயலாளர் என்கிற உயர்ந்த பொறுப்பில் உள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போல ஆளுமை மிக்க தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார். அவரைப் பற்றிப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

எடப்பாடி பழனிசாமியை விட சீனியர்களான செம்மலை, பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் இருந்தார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி விட்டார்கள் என வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். செம்மலை அப்போது சட்டமன்ற உறுப்பினராகவே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலேயே இல்லை. துணை முதலமைச்சராக இருந்துகொண்டு உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது.

அதிமுக பொதுக்கூட்டம்

நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமனதாகத்தான் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

உ.பி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்குச் சைக்கிள் சின்னம்; அகிலேஷ் ட்வீட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்ச... மேலும் பார்க்க

"நான் கூட்டணிக் கட்சிப்பா... என் மேலேயே ரெய்டா?" - கொதித்த வைத்திலிங்கம்; அதிரடித்த அமலாக்கத்துறை

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம் மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது அமலாக்கத்துறை. 2011-16 அ.தி.மு.க ஆட்சிக்கால... மேலும் பார்க்க

Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்... எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் தொகுத... மேலும் பார்க்க

Vaithiyalingam -க்கு BJP வார்னிங் - அமலாக்கத்துறை ரெய்டு பின்னணி! | ED raid news | OPS

வைத்திலிங்கம் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு டி.வி.ஏ.சி.யால் தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்... மேலும் பார்க்க

வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா?

ஏறுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் வைத்திலி... மேலும் பார்க்க

தமிழக ஆளுநர் ரவி மாற்றப்படுகிறாரா? - சலசலப்பும் உண்மை நிலையும்!

ஆளுநர் சர்ச்சைதமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே, ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ... மேலும் பார்க்க