செய்திகள் :

உ.பி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்குச் சைக்கிள் சின்னம்; அகிலேஷ் ட்வீட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி

post image

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் கேட்டது.

இது தொடர்பாக இரண்டு கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. திடீரென சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் ஒரு பதிவு காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அகிலேஷ் யாதவ் தனது பதிவில், "வெற்றியை இலக்காகக் கொண்டு 9 தொகுதியிலும் சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும். தொகுதிகள் முக்கியம் இல்லை. வெற்றிதான் தான் முக்கியம். ஒரு மிகப்பெரிய வெற்றிக்காகக் காங்கிரஸும், சமாஜ்வாடி கட்சியும் தோளோடு தோள் கொடுத்து நிற்கின்றன. இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய சாதனை படைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் முதல் பூத் மட்ட தொண்டர்கள் வரை அனைவரும் இணைந்து சமாஜ்வாடிக்குப் பலம் சேர்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மதநல்லிணக்கத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது என்றும், ஒரு வாக்கைக்கூட வீணாக்கவேண்டாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவின் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் சீட் உண்டா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

இரண்டு தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுப்பதாக ஆரம்பத்தில் சமாஜ்வாடி கட்சி தெரிவித்தது. ஆனால் இப்போது அகிலேஷ் யாதவ் பதிவைப் பார்க்கும்போது அந்த இரண்டு தொகுதியும் கிடையாது என்றே தெரிகிறது. மகாராஷ்டிராவில் சமாஜ்வாடி கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் கொடுக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால்தான் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அனைத்து தொகுதியிலும் சமாஜ்வாடி கட்சியே போட்டியிடட்டும் என்று கருதி விட்டுக்கொடுத்துவிட்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

Rahul Gandhi - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே செல்கிறது. அகிலேஷ் யாதவ் பதிவு குறித்து காங்கிரஸ் இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந... மேலும் பார்க்க

"நான் கூட்டணிக் கட்சிப்பா... என் மேலேயே ரெய்டா?" - கொதித்த வைத்திலிங்கம்; அதிரடித்த அமலாக்கத்துறை

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம் மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது அமலாக்கத்துறை. 2011-16 அ.தி.மு.க ஆட்சிக்கால... மேலும் பார்க்க

"உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது" - உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

"நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்..." என்று அ.தி.மு.க., முன்னா... மேலும் பார்க்க

Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்... எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் தொகுத... மேலும் பார்க்க

Vaithiyalingam -க்கு BJP வார்னிங் - அமலாக்கத்துறை ரெய்டு பின்னணி! | ED raid news | OPS

வைத்திலிங்கம் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு டி.வி.ஏ.சி.யால் தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்... மேலும் பார்க்க

வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா?

ஏறுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் வைத்திலி... மேலும் பார்க்க