செய்திகள் :

பிரியங்கா வேட்புமனு தாக்கலின் போது வெளியே காத்திருந்தாரா கார்கே?

post image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்த போது, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியே அனுப்பப்பட்டதாக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி புதன்கிழமை பேரணியாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த பேரணியின் நிறைவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவும், சோனியா காந்தியும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வயநாடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, மல்லிகார்ஜுன கார்கே வெளியே அனுப்பப்பட்டதாகவும், தலித் தலைவரை காங்கிரஸ் அவமதித்ததாகவும் விடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக மூத்த தலைவர்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இதையும் படிக்க : வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு விவரம்!

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட பதிவில்,

“மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் தலித் தலைவருமான கார்கேவை இன்று வயநாட்டில் அவமதித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்தாலும், அவரை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தி அவமானப்படுத்துவதில் அந்த குடும்பம் பெருமைப்படுகிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட பதிவில்,

“பிரியங்கா காந்தி முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது எங்கே இருந்தீர்கள் கார்கே? குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்பதால் வெளியே அனுப்பப்பட்டார்.

சோனியா குடும்பத்தின் ஆணவம் மற்றும் உரிமையின் பலிபீடத்தில் சுயமரியாதை மற்றும் கண்ணியம் ஆகியவை தியாகம் செய்யப்படுகிறது.

மூத்த தலித் தலைவரையும் கட்சித் தலைவரையுமே இப்படி நடத்தினால், அவர்கள் வயநாட்டு மக்களை எப்படி நடத்துவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி பிரணவ் ஜா கூறியதாவது:

“இந்த நாட்டை பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும் பொய்யை நாட வேண்டிய நிலைக்கு அரசும், அமைச்சர்களும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

வயநாட்டில் என்ன நடந்தது என்றால், அறையில் ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆகையால், ஓரிரு தலைவர்கள் வெளியே போவதும், ஒருவர் உள்ளே வருவதுமாக இருந்தது. ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

அதனால், காங்கிரஸ் தலைவர் சிறிது நேரம் பொறுமையாக என்ன காத்திருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் கார்கேவும், வேணுகோபாலும் உள்ளே இருப்பதை காணொலியில் உங்களால் காண முடியும். இதைத்தான் அந்த வீடியோ சித்தரிக்கிறது.

ஆனால், இந்த நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, பொய் சொல்லவும், அவதூறு பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு பாஜகவின் ஒட்டுமொத்த கூட்டமும் தள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் சித்தராமையா நேரில் ஆய்வு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் சி... மேலும் பார்க்க

உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அதன்பிறகு ராகுலுடன் பிரியங்கா வாகனத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் விடியோ ஒன்று ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் ஆய்வுக் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் செய்யப்ப... மேலும் பார்க்க

காரில் எரிந்த நிலையில் தொழிலதிபர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே, எரிந்த நிலையில் இருந்த காரிலிருந்த தொழிலதிபரின் உடல் கூறாய்வில், அவர் மூச்சுத் திணறி பலியானது தெரிய வந்ததையடுத்து, அவரது 2 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று நள்ளிரவு கரையை கடக்கும் டானா புயல்: அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்றிரவு ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.ஒடிஸாவில் ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கட... மேலும் பார்க்க

டானா புயல் எங்கே கரையை கடக்கும்? வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் கரையை கடக்கும் இடம் குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச... மேலும் பார்க்க