செய்திகள் :

இன்று நள்ளிரவு கரையை கடக்கும் டானா புயல்: அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

post image

வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்றிரவு ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

டானா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, மேற்கு வங்கம் என இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புதன்கிழமை காலை புயலாக வலுவடைந்தது.

இதையும் படிக்க.. பிரியங்கா வேட்புமனு தாக்கலின் போது வெளியே அனுப்பப்பட்டாரா கார்கே?

இந்த புயல் சின்னம் பற்றி முக்கியமான பத்து தகவல்கள்..

இந்த புயல் சின்னம் ஒடிசா - மேற்கு வங்கம் கடற்கரை இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் இடையே கரையை கடக்கலாம் என கணிப்பு.

கரையை கடக்கும் நிகழ்வானது அக்.24 நள்ளிரவில் தொடங்கி அக். 25 அதிகாலை வரை நீடிக்கும்.

கரையைக் கடக்கும் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் அலைகள் 2 மீட்டா் உயரத்துக்கு எழும் என எச்சரிக்கை.

டானா புயல் காரணமாக அங்குல், பூரி, நாயகா், கோா்தா, கட்டாக், ஜகத்சிங்பூா், கேந்திரபாரா, ஜாஜ்பூா், பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்.

டானா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), ஒடிஸா பேரிடா் அதிவிரைவுப் படை (ஒடிஆா்ஏஎஃப்), தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றின் 28 மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளன.

பாதிக்கப்படும் அபாயம் உள்ள கிராமங்களிலிருந்து ஏற்கனவே 3 முதல் 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். இன்று இரவுக்குள் முழுமையாக இப்பணிகள் முடிந்துவிடும் எனத் தகவல்.

வியாழக்கிழமை மாலை முதல், புவனேஸ்வரம் விமான நிலையத்திலிருந்து விமானப் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மேற்கு வங்கத்தில் இதுவரை 1.4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2.8 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணி தீவிரம்.

வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானப் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் இயக்கப்படும் 190 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்... மேலும் பார்க்க

அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும்... மேலும் பார்க்க

பொதுக் கணக்கு குழு முன் ஆஜராகாத செபி தலைவர்! ஏன்?

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு அமர்வின் முன், செபி தலைவர் மாதவி புச் இன்று ஆஜராக இயலவில்லை எனத் தெரிவித்ததால், கூட்டத்தை ஒத்திவைத்ததாக அக்குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தார்.செபி... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் முதல் தேர்தல்: ராபர்ட் வதேரா என்ன சொல்கிறார்?

பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் ப... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் சித்தராமையா நேரில் ஆய்வு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை மீட்பு மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டு மறுசீரமைப்புப் பணிகளை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் சி... மேலும் பார்க்க

உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்

வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அதன்பிறகு ராகுலுடன் பிரியங்கா வாகனத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் விடியோ ஒன்று ச... மேலும் பார்க்க