செய்திகள் :

`+91-xxx..’ உள்நாட்டு அழைப்பு போன்றே வரும் வெளிநாட்டு மோசடி அழைப்புகள் - புதிய அமைப்பின் பலன் என்ன?

post image
டிஜிட்டல் மயமாகி வரும் நாட்டில் அதிகரித்து காணப்படும் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், உள்நாட்டு எண்கள் போலவே, போலியாக வரும் சர்வதேச அழைப்புகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் ஒரு புதிய கண்காணிப்பு அமைப்பை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'உள்வரும் ஏமாற்று அழைப்புகள் தடுப்பு அமைப்பு'( ‘International Incoming Spoofed Calls Prevention System’) என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பை செவ்வாயன்று அறிமுகம் செய்து வைத்தார். பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கவும், சைபர் குற்றத்திலிருந்து குடிமக்களைக் காக்கவும், தொலைத்தொடர்புத் துறையின் முக்கிய முயற்சியாக இந்த அமைப்பினை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து அரசு தரப்பில் விவரித்தனர்.

சர்வதேச அழைப்புகளை உள்ளூர் இந்திய எண்களாக (எ.கா., +91-xxxxxxxxx) காண்பிக்கும் தந்திரத்தின் மூலமாக சைபர் குற்றவாளிகள் நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அழைப்பு வரி அடையாளத்தை (CLI) மாற்றுவதன் மூலம், இந்த அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், இந்தியாவிற்குள்ளேயே இருப்பது போல் காட்டப்படுகின்றன. இத்தகைய மோசடியான அழைப்புகளை கண்டறிந்து, மோசடி செய்பவர் தனது இலக்கினை அடையும் முன்பே மோசடியை தடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த அமைப்பு அக்டோபர் 17-ம் தேதி செயல்படத் தொடங்கியது என்றும், முதல் 24 மணி நேரத்திற்குள் சுமார் 13.5 மில்லியன் ஏமாற்று அழைப்புகளை கண்டறிந்து தடுத்துள்ளது என்றும் அரசின் அறிக்கைகள் தெரிவிக்கிறது. இது உள்வரும் அனைத்து சர்வதேச அழைப்புகளில் 90 சதவீதமாகும்.

"இந்திய டெலிகாம் சந்தாதாரர்கள் நிறுவப்பட்டுள்ள இந்த அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் +91-xxxxxxx எண்கள் கொண்ட இதுபோன்ற ஏமாற்று மோசடி அழைப்புகளில் குறிப்பிடத்தக்க குறைவைக் காண வேண்டும்" என அரசின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் கால்

ஜூலை மாதம், சென்ட்ரலைஸ்டு இன்டர்நேஷனல் அவுட் ரோமர் (CIOR) என்ற பெயரில் இந்த அமைப்பை நிறுவ தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) நிதி அமைச்சகம் ரூ.38.76 கோடியை ஒதுக்கீடு செய்தது. கூடுதலாக, டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவுக்கான (DIU) நிதியுதவி மூலம் தொலைத்தொடர்பு ஆதாரங்களின் தவறான பயன்பாடு, மோசடி, ஸ்பேம் அழைப்புகள், செய்திகள் உட்பட்டவற்றை சீர்படுத்த 50 கோடி ரூபாய் நிதி 2024 ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 85 கோடி ரூபாயாக 2025 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடியான தகவல்தொடர்புகள் குறித்த புகார்களை சஞ்சார் சாத்தி தளத்தில் சக்ஷு வசதி மூலம் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`தீபாவளி' ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் - ஒரே நாளில் இவ்வளவா?!

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தி... மேலும் பார்க்க

Dengue: டெங்குவால் நிகழும் உயிரிழப்புகள் குறைந்திருக்கிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளைத் தமிழக... மேலும் பார்க்க

`ரயில்வே கம்பளிப் போர்வை' - வெளியான RTI தகவல்; நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க செய்ய வேண்டிதென்ன?

ரயிலில் ஏசி பெட்டிகளின் பயணம் செல்லும்போது, அங்கு வழங்கப்படுக்கிற வெள்ளை நிற போர்வைகளையும் கம்பளிப் போர்வையையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்தப் போர்வைகள் சுத்தமாக பராமரிக்கப்படுக... மேலும் பார்க்க

வயநாடு: `தந்தைக்காக 17 வயதில் பிரசாரம்; இன்று எனக்காக..!” - சென்டிமென்ட் பிரியங்கா

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி‌ பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் 13 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சி... மேலும் பார்க்க

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்... மேலும் பார்க்க