செய்திகள் :

`எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறுங்கள்.. விஷத்தை ஏற்றாதீர்கள்' - திருமாவளவனுக்கு அதியமான் மெசேஜ்

post image

ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கெனவே வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு செல்லும் என்பதையும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதியமான்

வரும் காலத்தில் சரியான தரவுகளின் அடிப்படையில் இன்னும் பின்தங்கிய மக்கள் யாரெனும் இருந்தாலும் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு என்று திருமாவளவன் கூறியிருக்க வேண்டும். 

திருமாவளவன்

அவர்களின் எந்த நடவடிக்கையும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இல்லை. 20 ஆண்டுக்கால விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கைகளில், என்றைக்காவது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்து உள்ளார்களா.

உள் ஒதுக்கீடு என்பது வாழ்க்கை போராட்டம். 30 ஆண்டுக்காலம் போராடி இந்த ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. கூட்டணி கட்சியில் இருக்கும்போது அந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, அவர்கள் கொண்டு வருகின்ற மசோதாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

எதிர்த்திருந்தால் நீங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியிருக்கலாமே... உள் ஒதுக்கீடு என்பது கலைஞரின் திட்டம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து வருகிறது. திருமாவளவன் நிலையான கருத்தில் நிற்க வேண்டும்.

எங்களை எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறுங்கள். ஆதரிக்கிறோம் ஆதரிக்கிறோம் என்று கூறிக் கொண்டே விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானதா.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

அருந்ததியர் மக்களுக்கு கீழ் ஏதேனும் சாதி இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து கொடுங்கள். தமிழக முதல்வர் இது சம்பந்தமாக குழு அமைத்து வகைப்படுத்துதலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

Vijay: தவெக மாநாடு; ``உங்களுக்காக எங்களிடமிருந்து..." - வாழ்த்தும் இயக்குநர் வெங்கட் பிரபு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பண... மேலும் பார்க்க

வடலூர்: அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்ட... மேலும் பார்க்க

15 மணி நேர ED ரெய்டு.. சோகத்தில் OPS! | Cyclone Dana| BJP | DMK | ADMK| TVK Vijay | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா? * தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா... பதறி வெளியேறிய ஊழியர்கள்; அம... மேலும் பார்க்க