செய்திகள் :

`அஜித் பவாருக்கே கடிகாரம் சின்னம்'- கைவிட்ட சுப்ரீம் கோர்ட்... சரத் பவாருக்குப் பின்னடைவு!

post image

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கடந்த ஆண்டு இரண்டாக உடைத்தார். அவர் இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்து துணை முதல்வராக இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் அஜித் பவாருக்கு ஆதரவாக சென்றதால் தேர்தல் கமிஷன் அஜித் பவார் தலைமையிலான அணியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்து, அக்கட்சியின் சின்னமான கடிகாரத்தையும் அஜித் பவார் அணி பயன்படுத்த அனுமதி கொடுத்தது. அதேசமயம் சரத் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) என்ற கட்சியும், வேறு சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் தலைமையில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர்.

சரத் பவார் ஏற்கனவே தங்களது கட்சி சின்னத்தை அஜித் பவாருக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு நிலுவையில் இருந்து வந்தது. இதற்கு முன்பு விசாரணைக்கு இம்மனு விசாரணைக்கு வந்த போது அஜித் பவார் அணிக்கு சில உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்து இருந்தது. அதனை அஜித் பவார் அணி சரியாக பின்பற்றவில்லை என்று தெரிகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அஜித் பவார் அணியினர் கோர்ட் உத்தரவை மீறுவதாகவும், எனவே கடிகாரம் சின்னத்தை முடக்கிவிட்டு அவர்களது அணிக்கு வேறு சின்னம் கொடுக்கவேண்டும் என்று கோரி சரத் பவார் தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தங்களது மனுவை அவசரமாக விசாரிக்கவேண்டும் என்று சரத் பவார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மனு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், திபன்கர் தத்தா, உஜால் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சரத் பவார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட் இதற்கு முன்பு பிறப்பித்த உத்தரவில் கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று விளம்பரங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. அதோடு ஆடியோ மற்றும் வீடியோ, துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்யும் போது இதனை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அஜித் பவார் தரப்பு அந்த உத்தரவை மீறுவதாகவும், இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதாகவும் சரத் பவார் தரப்பில் வாதிட்டனர். எனவே கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியதை திரும்ப பெறவேண்டும் என்றும் வாதிட்டனர். ஆனால் அஜித் பவார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிவிட்டதாகவும், எனவே சின்னத்தை மாற்றுவது சரியாக இருக்காது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சரத் பவார் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். கடிகாரம் சின்னம் தொடர்ந்து அஜித் பவார் அணியிடமே இருக்கும் என்றும், அதேசமயம் அஜித் பவார் தரப்பு விளம்பரங்களில் கோர்ட் சொன்னபடி தகவல்கள் இடம் பெறவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக உறுதிமொழி கொடுக்கவேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டால் கோர்ட்டே அதனை மனுவாக எடுத்து விசாரிக்கும். எனவே அது போன்ற ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளவேண்டாம் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சரத் பவார் சுப்ரீம் கோர்ட்டை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் சரத் பவாருக்கு சாதகமாக செயல்பட்டால் அதனை காரணம் காட்டி உத்தவ் தாக்கரேயும் சுப்ரீம் கோர்ட் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் இரண்டு பேரது ஆசையும் நிராசையாகிவிட்டது.

திருவாரூர்: மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்; தொய்வுடன் நடைபெறும் திருப்பணி - மக்கள் வேதனை

திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் விட்டவாசல் பகுதியில் அமைந்துள்ளது மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்.மனுநீதிச் சோழன் என்பவர் திருவாரூர் மண்ணை ஆண்ட சோழ மன்னன் ஆவார். இன்னும் நீதி தவறாமை... மேலும் பார்க்க

Britney Spears: "நான் வாழ்வில் செய்த சிறந்த காரியம்.." - தன்னைத்தானே திருமணம் செய்த பாடகி ஸ்பியர்ஸ்

அமெரிக்காவின் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் ஈரானிய-அமெரிக்க... மேலும் பார்க்க

Stammering Day: `பேச்சுக்கு எல்லை ஏது?' – ரேடியோ மிர்ச்சியின் ஒரு துணிச்சலான செயல்

புதுமையான யோசனைகளுக்கு பெயர் பெற்ற ரேடியோ மிர்ச்சி, அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மற்றொரு தைரியமான முயற்சியுடன் மீண்டும் வந்துள்ளது.இந்த நேரத்தில், அவர்கள் ரேடியோ ஜாக்கிகளாக (RJs) பேச்சு குறை... மேலும் பார்க்க

சல்மான்கானை குறிவைக்கும் கேங் - பிளாக்பக் மான்களுக்கும் பிஷ்னோய் இனத்துக்குமான 5 நூற்றாண்டு தொடர்பு!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு `ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஜெய்ப்பூர் அருகே இரண்டு அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு... மேலும் பார்க்க

Bishnoi : சல்`மான்' சர்ச்சையால் பேசுபொருளான `வன' பாதுகாவலர்கள்! - யார் இந்த பிஷ்னோய் இன மக்கள்?

லாரன்ஸ் பிஷ்னோய் இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு மாஃபியாவாக வளர்ந்து நிற்கிறார். இந்த அளவுக்கு அறியப்படுவதற்கு காரணம் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததுதான். சல்மான... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: தமிழ்த்தாய் வாழ்த்து `டு' ஹமாஸ் தலைவர் கொலை... கேள்விகளுக்கு பதிலளிக்க ரெடியா?

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது குறிப்பிட்ட வரி மட்டும் பாடாமல் விட்டது, பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது, உச்ச நீதிமன்றதி... மேலும் பார்க்க