செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

post image

தூத்துக்குடி மீனவர்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் கேரள விசைப்படகு மீனவர்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் தினமும் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி விடுவர். இவர்கள், தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் இரவில் தங்கி தொழில் செய்து வருகின்றனராம்.

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இதனைக் கண்டித்தும் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்யும் கேரள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்க தமிழக அரசு மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவுள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவ... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இளம் வயதினரில் 50% பேருக்கு ரத்த சோகை! - அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரில் 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டி... மேலும் பார்க்க

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆம்பூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மழை வெள்ளம் ஒரு நாள் தான் ... மேலும் பார்க்க

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!

தீபாவளி பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புறநகர் பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்ப... மேலும் பார்க்க