செய்திகள் :

தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?

post image

தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம்.

இந்த நிலையில், 'ரஷ்யா தொடர்ந்து வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது' என்கிற புதிய தகவலை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"தற்போது ரஷ்யாவின் மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை உலக நாடுகளின் வங்கி, வெள்ளியை வாங்கிக் குவித்ததைப் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை.

தங்கத்தைத் தான் அதன் மதிப்பு கருதி உலக வங்கிகள் வாங்கும். வெள்ளி பெரும்பாலும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தான் பயன்படுத்தப்படும்.

அப்படியிருக்கையில், ரஷ்யா வெள்ளியை வாங்கிக் குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

வெள்ளை மாளிகையும், வெள்ளியும்

கடந்த மாதம், வெள்ளை மாளிகை அரிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளியைச் சேர்த்தது. இது வெள்ளியின் விலையை உயர்த்தலாம் என்று அப்போது கணிக்கப்பட்டது.

அநேகமாக, அப்போதிருந்துதான் ரஷ்யா வெள்ளியை வாங்கத் தொடங்கியிருக்கும்.

ரஷ்யா - உக்ரைன் போரை முன்னிட்டு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குபவர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. ஆனால், வெள்ளி தங்கள் வசம் இருந்தால், இந்த விஷயத்தில் தங்கள் மீது வரி விதிக்க முடியாது என்று ரஷ்யா கருதலாம்.

காரணம், தொழிற்சாலைகளில் மில்லியன் கணக்கில் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது.

அதனால், இது ரஷ்யாவின் புதிய உத்தியாக இருக்கலாம்".

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை" - சித்தராமையா

காங்கிரஸ் கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின்போதும் சரி, தேர்தலுக்குப் பிறகும் சரி தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "நாங்களே மன கஷ்டத்தில் இருக்கிறோம்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று (அக்.8) காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்சவேணியின் மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல... மேலும் பார்க்க

புதிய தலைமுறை முடக்கம்: `முதல்வரே, கருத்துச் சுதந்திரம் என்னவாகும்?’ - அ.குமரேசன்

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)கட்டுரையாளர்: அ.குமரேசன்நிகழ்வுகளை விமர்சனக் ... மேலும் பார்க்க

Modi: 'குஜராத் முதல்வர், பிரதமர்' - இன்றோடு 25-வது ஆண்டைத் தொடும் பிரதமர் மோடி; குவியும் வாழ்த்து!

இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.மோடி பதிவு அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது..."இன்றுதான் 2001-ம் ஆண்டு, கு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில... மேலும் பார்க்க

"ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!" - அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை?

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமு... மேலும் பார்க்க